பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/378

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாலாட்டு - 253 தினே மாவைத் திரித்துவைத்துக் - கண்மணியே திரித்தமாவைச் சலித்துவைத்துச் 45 சவித்தமாவை உருட்டிவைத்துக் - கண்மணியே சலிப்பில்லாமே இனிப்பும்போட்டு புள்ளேயார்க்கும் கொடுத்துப்பார்த்தேன்.கண்மணியே பூசாரிக்கும் கொடுத்துப்பார்த்தேன். ஒருபிள்ளேக்குப் பத்துருண்டை - கண்மணியே ஊர்ப்பிள்ளைக்கும் கொடுத்துப்பார்த்தேன். நேத்திக்கடன் நிறைவேற்றினேன் - கண்மணியே நெய்விளக்கு ஏற்றிவைத்தேன். தானமெல்லாம் செய்துபார்த்தேன் - கண்மணியே தருமமெல்லாம் செய்துபார்த்தேன். 50 காசிதீர்த்தம் செய்து பார்த்தேன் - கண்மணியே குற்ருலத்தில் குளித்துப்பார்த்தேன். ராமேச்வரம் போய்ப்பார்த்தேன் - கண்மணியே பாவநாசமும் போய்ப்பார்த்தேன். i பழனிமலை மேலிருக்கும் - கண்மணியே பழனியாண்ட வனேயும்பார்த்தேன். கொஞ்சறத்துக்குப் பிள்ளையில்லை - கண்மணியே கொள்ளிவைக்கப் பிள்ளையில்லை. என்ன பாவம் செய்தேனே'அம்மா - கண்மணியே ஏதுபாவம் செய்தேனே'அம்மா! 55 மெழுகிவைத்த வீட்டுக்குள்ளே - கண்மணியே விளையாடப் பிள்ளே இல்லை. கூட்டிவைத்த வீட்டுக்குள்ளே - கண்மணியே குப்பைபோடப் பிள்ளை இல்லை. கிறைத்துவைத்த நிறைகுடத்தைக் - கண்மணியே குறைத்துவைக்கப் பிள்ளை இல்லை. ஆக்கிவைத்த அண்டாச்சோற்றைக் கண்மணியே அள்ளித்தின்ன்ப் பிள்ளை இல்லை. -