பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரபந்தங்கள் 31 வட்டமிட்டுப் பெண்கள் வ&ளக்கரங்கள் தாமொலிக்கக் கொட்டி இசைத்திடுமோர் கூட்டமுதப் பாட்டினிலும் நெஞ்சைப் பறிகொடுத்தேன் பாவியேன்." கம்பர் ஏற்றக்காரன் முதல் நாள் பாதியில் விட்ட பாட்டை மறுநாள் அவன் வாயிலாகக் கேட்குமட்டும் எவ்வளவு முயன்றும் முடிக்க முடியாமல் அல்லலுற்ருரென்று ஒரு வரலாறு வழங்கு கிறது." "ஏற்றப் பாட்டிற்கு எதிர்ப்பாட்டில்லை, பூசாரி பாட்டிற்குப் பின் பாட்டில்லே" என்ற பழமொழி அந்தப் பாடல்கள் தாமாக வருமேயன்றிப் புலமையால் அமைவனவல்ல என்பதைப் புலப் படுத்துகிறது. - - இலக்கணப் புலவராகிய தொல்காப்பியர் நாடோடிப் பாடல் களைப் பண்ணத்தி யென்று கூறி இசை வகுத்தார். இலக்கியப் பெரும் புலவர்கள் அப் பாடல்களில் மனம் செலுத்தி இன்புற்று அவற்றைப் பற்றித் தம் நூல்களில் கூறினர்கள் , அவற்றைப் போன்ற அமைப்பை வைத்துப் பல பாடல்களைப் பாடினர்கள். இதுவரையில் கூறியவற்றிலிருந்து இவை தெள்ளத் தெளிய விளங்கும். . . ; . . . . . . பிரபந்தங்கள் நாடோடிப் பாடல்களே அடியொற்றிப் பாடிய பல பாடல் கள் நாளடைவில் தனிப் பிரபந்தமாக வழங்கலாயின. குறத்தி யின் பாட்டிலிருந்து குறம் எழுந்து, பின்பு குறவஞ்சி எழுந்தது. பள்ளர்கள் பாடும் குலவைப் பாட்டு முதலியவற்றிலிருந்து பள் ளேசலும் பள்ளும் தோன்றின. தாலாட்டிலிருந்து தனியே தாலாட்டு நூல்கள் உண்டாயின. தாலாட்டு உருவத்தில் கீதா சாரத் தாலாட்டு என்ற நூல் ஒன்று தமிழில் உண்டு. பிள்ளைத் தமிழில் வரும் காலப் பருவமும் குலசேகரப் பெருமாள் சக்கர வர்த்தி திருமகனேப்பாடும் தாலாட்டும் இந்த வகையிலே எழுந்தன. "அம்புலிமானே வாவா என்று குழந்தைகளுக்கு விளையாட்டுக் காட்டும் பாட்டைப் பார்த்து அம்புலிப் பருவம் எழுந்தது. ஒடப் பாட்டைப் பார்த்துப் பல புலவர்கள் ஒடப்பாட்டைப் பாடினர். 1. குயிற் பாட்டு, 3: 35-44 , 2. இதன் விரிவை, புது மெருகு" (கி.வா.ஜ.) என்னும் புத்தகத் திற்காண்க. - . . -: * > . . --