பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 ஆராய்ச்சி உரை பல புலவர்கள் கும்மி பாடியிருக்கிருர்கள். அது காடோ டிப் பாடலாக முளேத்துப் பின்பு புலவர் படைப்புக்குள்ளும் புகுந்து கொண்டது. கோபாலகிருஷ்ண பாரதியார் பாடிய சிதம் பரக் கும்மியும், அருட்பிரகாச வள்ள லார் பாடிய கும்மிகளும், வாலேக் கும்மி முதலிய வேறு பல கும்மிகளும் எழுவதற்கு ஆதி யில் உருவான காடோடிக் கும்மிகளே வழிகாட்டிகள். 5. நாடோடிப் பாடல்களின் சிறப்பியல்புகள் நாடோடிப் பாடல்களுக்கென்று சில சிறப்பான இயல்புகள் உண்டு. ஒரு குறிப்பிட்ட பாடலே முதல் முதலில் யாரேனும் ஒரு வர் இயற்றி யிருக்கத்தான் வேண்டும். அவர் இலக்கியப் புலமை படைக்காவிட்டாலும் மற்றப் பாமரர்களைப்போல் இல்லாமல் ஒரளவு சொல்வன்மை உடையவராகவே இருப்பார். கூலி வேலை செய்யும் பெண்கள் தம்மிடம் உள்ள இயற்கையான ஆற்றலால் அவ்வப்போது பாடல்களைப் பாடுவதும் உண்டு. இலங்கையில் மட்டக் களப்பு என்னும் பகுதியில் இன்றும் இவ்வாறு பாடல்கள் முளேக்கின்றன. எதுகை, மோனே, ஒசை என்னும் மூன்றும் தெரிந்தவர்கள் பாடல்களைப் பாடி விடலாம். எதுகை மோனை எதுகை மோனே என்பவை தமிழ் காட்டு மக்களுக்கு இயல் பாகவே கைவரப் பெற்றவை என்றே சொல்லவேண்டும். "மானங் கெட்டவளே-மரி யாதை கெட்டவளே, ஈனங் கெட்டவளேஇடுப் பொடிந்தவளே” என்ற வசவில்கூட எதுகையும் மோனே யும் இருக்கின்றன. அடிமுதலில் எதுகை வருவதென்பது தமி முக்கே அமைந்த தனிச் சிறப்பு. பேச்சு வழக்கில் எத்தனையோ தொடர்கள் எதுகைச் சிறப்புடையனவாகப் புரளுகின்றன. அக் கிலி பிக்கிலி, அக்கம் பக்கம், அசட்டுப் பிசட்டு, அடிதடி, அமட் டல் குமட்டல், ஆசாரம் பாசாரம், ஏழை பாழை, கண்டதுண்டம், காமா சோமா, ஜபதபம் என்பவைபோல உள்ளவற்றைக் காண்க. அப்படியே மோனே கயம் அமைந்த தொடர்களுக்கும் குறை. வில்லை. அல் அசல், ஆடி அமாவாசை கல்யாணம் கார்த்திகை, கொள்வினை கொடுப்பினே, பற்றுப் பாத்திரம், கோயில் குளம், தோப்புத் துரவு முதலியவற்றைக் காண்க. பேச்சு வழக்கில்