பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எதுகை மோனே 23. தண்ணிர் பட்ட பாடாக வழங்கும் எதுகை மோனைகள் பழமொழி களில் சிறப்பாக அமைந்திருப்பது வியப்பன்று. அக்கரைக்கு இக்கரை பச்சை', 'அகதியைப் பகுதி கேட்கிறதா?', 'அகம் ஏறச் சுகம் ஏறும்', 'ஒன்றைப் பெற்ருலும் கன்றைப் பெறு', 'குட்டை யில் ஊறிய மட்டை' என்பனபோல ஆயிரக்கணக்கான பழமொழி களில் எதுகை அமைந்திருக்கிறது. அப்படியே, சிங்கத்தின் காட் டைச் சிறுகரி வளைத்தாற்போல', 'சூலிக்குச் சுக்குமேல் ஆசை, 'தலை ஆட்டித் தம்பிரான்', 'தீயில் இட்ட நெய் திரும்ப வருமா?, 'பெண்சாதி கால்கட்டு, பிள்ளை வாய்க்கட்டு', 'மனப்பால் குடித்து மாண்டவர் அநேகர் என்பன போன்றவற்றில் மோனே நயத்தைக் காணலாம். நாடோடிப் பாடல்களில் குழந்தைகள் விளையாடும்போது பாடும் பாடல்களிலே பொருள் ஒன்றும் இல்லாவிட்டாலும் எதுகை நயமும் மோனே யமைதியும் உள்ள பல பாட்ல்கள் உண்டு. அந்த இரண்டும் குழந்தைகளுக்கு இன்பத்தை உண்டாக்குகின்றன. கண்ணும் கண்ணும் பூச்சாரே காது காது பூச்சாரே - என்பது கண்ணுமூச்சி விளையாட்டுப் பாடல். கண்ணே மூசுதல் என்ருல் கண்ணே மூடுதல் என்று பொருள். கண் மூசி, என்பது கண்ணு மூச்சி ஆகிப் பிறகு கண்ணும்பூச்சி என்றும் வழங்குகிறது. இந்தப் பாட்டில் பொருள் சிறிதளவே இருக்கிறது. ஆனல் எதுகை மோனே அமைதியே சிறப்பாக இருக்கிறது. • , o, தத்தக்கா புத்தக்கா தவலேச் சோறு நெற்றிமா நெருங்கமா பச்சை மரத்திலே பதவக் கட்டப் பன்றி வந்து சீராடப் பறையன் வந்து நெல்லுக் குத்தக் குண்டுமணி சோருக்கக் குருவி வந்து கூப்பிடுது' இந்தப் பாட்டில் சொற்களுக்குப் பொருள் இருந்தாலும் அந்தப் பொருள் தொடர்ச்சியாக இல்லை; ஆலுைம் எதுகையின லும் மோனேயிலுைம் ஒசையழகு அமைந்திருக்கிறது. ,மலேயருவி, ப. 260. - . . . . . . . o .1 ۔ 9--سب-سمہب