பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 ஆராய்ச்சி உரை வெத்தலேக் கட்டு விரியக் கட்டு தோட்டத்துக் காரணப் புடிச்சுக் கட்டு என்பதிலும் அந்த இயல்பையே காணலாம். - ஒசை அமைதி - இலக்கியங்களில் கால்வகைப் பாக்களும் அவற்றின் இனங் களும் அமைந்திருக்கின்றன. காடோடிப் பாடல்களில் பெரும் பாலும் கண்ணிகளும் சிந்துகளும் பயின்று வருகின்றன, பல பாடல்களில் ஏதோ ஒருவகையில் ஒழுங்கான ஓசை அமைதி இருக் கிறது. சில வகையான பாடல்களுக்கு இன்ன ஓசைதான் என்ற மரபு அமைந்திருக்கிறது. தெம்மாங்கு என்பது ஒரு குறிப்பிட்ட ஓசையமைதியோடு இருக்கிறது. தாலாட்டு, ஏற்றப் பாட்டு, ஒப் பாரி, கும்மி, ஒடப் பாட்டு முதவியவற்றிற்கும் திட்டமான உரு வங்கள் அமைந்திருக்கின்றன. இன்ன பாட்டிற்கு இன்னதுதான் இலக்கணம் என்று புலமையுலகத்து வாய்பாட்டிலே சொல்ல இயலாவிட்டாலும் காதிலே கேட்டால் இன்ன பாட்டு என்று பழக்கத்தால் தெரிந்து கொள்ளலாம். இலக்கியங்களில் வரும் பாக்களுக்கும் இந்த இலக்கணம் பொருந்தும். பேராசிரியர் பாவைப் பற்றிச் சொல்லுகையில், பாவென்பது, சேட்புலத்திருந்த காலத்தும் ஒருவன் எழுத்தும் சொல்லும் தெரியாமற் பாடம் ஒதுங் கால், அவன் சொல்லுகின்ற செய்யுளே விகற்பித்து இன்ன செய் யுள் என்று உணர்தம் கேதுவாகிப் பரந்துபட்டுச் செல்வதோர் ஓசை" என்று கூறுவதிலிருந்து இது புலகுைம். சொற்கள் நாடோடிப் பாடல்களில், வழக்கில் மாத்திரம் வழங்கும் சொற் களும், சிதைந்த சொற்களும் மிகுதியாக வரும். . சந்தை விலைமதிப்பாள் சந்தனத்தைத் தோற்கடிப்பாள் துப்பட்டி வாங்கித் தந்தால்-மாமாடா ». - தோளிலே போர்த்திப் பார்ப்போம்! - அம்மத்தாளிடம் கொடுத்தேன் - குழந்தை உலகம் (கி. வா. ஜ.), ப. 34, தொல். செய்யுள். 1, உர்ை. - கஞ்சியிலும் இன்பம் (கி.வா. ஜ.), ப. 19. ,ை ப. 23. குழந்தை உலகம் (கி.வா. ஜ.) .78.