பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/412

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

290 மலை அருவி முக்கே முத்தேநீ கும்.மியடி - அடி மோகன முக்தே நீ கும்.மியடி கறுப்புக் கொசுவத்தைத் திருப்பிவச் சுக்கட்டும் கண்ணுடி முக்கே நீ கும்.மியடி. ஓடாதே ஓடாதே கொள்ளைக் காதா ே ஒட்டம் பிடிக்காதே இல்லிக்கண்ணு மாட்டு எலும்பை எடுத்துக்கிட்டு - நான் உன் மார்பெலும்பை யெல்லாம் கட்டிடுவேன். பத்துப் பெண்களும் கூடிக்கிட்டு நம்ம பட்டணம் மைதானம் போகையிலே பார்த்துக்கிட் டிருந்த பறப்பயல் ஒருத்தன் பட்டுமுந் தானிமேல் ஆசைவைத்தான். ஊரான் ஊரான் தோட்டத்திலே - அங்கே ஒருத்தன் போட்டது வெள்ளரிக்காய் காசுக்கு ஒண்ணுெண்ணு விற்கச்சொல்லி - அவன் காயிதம் போட்டானும் வேட்டைக்காரன். வேட்டைக்கா ரன் பணம் வெள்ளிப்பணம் - அது வேடிக்கை பார்க்குது சின்னப்பணம் வெள்ளிப் பணத்துக்கு ஆசைவச்சு அவள் வீராயி வந்தாடி ஆராயி. தேனும் உருளத் தினேஉருள - அந்தத் தேங்காய்த் தண்ணிரும் அலைமோத மாங்காய் கனிந்து விழுகுதுபார் . அந்த மகராசன் கட்டின தோட்டத்திலே, இந்தநல்ல நிலா வெளிச்சத்திலே - அம்மா என்னைக்கல் லாலே அடிச்சதாரடி அவர்தாண்டி நம்ம எல்லாருக்கும் மாமன் அன்று மாம்பழங் கொடுத்தவரு. ஆற்று மணலிலே ஊற்றெடுத்து - அம்மா அஞ்சாறு மாசமாச் சண்டைசெய்து வேற்று முகப்பட்டு வாருரே - அம்மா வெள்ளிச்சுங் கங்கட்டி வீசுங்கம்மா. 10 11 12 14 15