பக்கம்:மலையருவி கவிதைகள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
20


தவங்களிடத்தே
பாடங்களின் பின்னல்களை
நெய்யத் தொடங்கவும்
பிணங்களிடத்தே
அறிவுகளின் கோலத்தை
வரையத் தொடங்கவும்
அமைதி வடியச்
சிந்தனை காயம்பட்டுள்ளது
அன்பு கசிய
நெஞ்சு நசுக்கப்பட்டுள்ளது

(காயம்பட்ட சிந்தனை)

ஒரு நூலிழையில்
தடுக்கி
ஊசியின் கூர்முனையில்
எனைப்
பத்திரப்படுத்திக் கொண்டபின்தான்
அந்த யாரோ
கள்ளிப்பாலில் உடல்விரித்துக் ::கத்தாழை முள்ளில்
கரையேறக் கண்டேன்

(ஐக்கியம்)

நெஞ்சில் நிமிர்ந்த
பிரமிடுகளின்
அடிக்கல் பெயரக்
கற்கள்
மடிந்து விழுகின்றன.