பக்கம்:மாணவர்களுக்கு புறநானூற்றுச் சிறுகதைகள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

மாணவர்களுக்குப் புறநானுற்றச் சிறுகதைகள்


5. குறைப்பிறவிகள்

ஒரு குழந்தை பிறந்தது. அது, குருடு அழகிய காட்சியைப் பார்க்க முடியாது. மற்றொரு குழந்தை பிறந்தது! அது உருவமற்ற பிண்டம். கை இல்லை. கால் இல்லை. கண் இல்லை. வாயும் கூட இல்லை. மற்றும் சில குழந்தைகள் பிறந்தன. அவை, கூன், குருடு, ஊமை, செவிடு, மா, மருள்...

எட்டுக் குழந்தைகளும் குறைப் பிறவிகள். அவை வாழ்ந்தும் பயன் என்ன? உலகில் உள்ள மனித உயிர்களுக்கு கை, கால், உண்டு. கண், வாய், மூக்கு, செவி வாய் வயிறு எல்லாம் பெற்ற நிறை பிறவிகள்தாம் அவை. ஆனால் அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றையும் நாடாத பிறவிகள் அவை. எட்டுக் குறைகளுடைய எச்சப் பிறவிகளிலும், கொச்சைப் பிறவிகள் அவை.


6. புறாவும் புதல்வரும்

கிள்ளி வளவனுக்குக் கோபம் வந்தது. தன் பகைவனான மலய மானுடைய மக்களை, கொலையானைக் கால்களில் இடறவைத்துக் கொல்ல முயன்றான்:

நிறுத்து!, என்ற ஒரு குரல் கேட்டது! நிமிர்ந்து வாளுடன் திரும்பினான்.

கோவூர் கிழார் நின்றிருந்தார்.

“உன் மரபு எது?” என்று கேட்டார், கிழார்.

“கிள்ளிக்கு ஒன்றும் விளங்கவில்லை!