பக்கம்:மாணவர்களுக்கு புறநானூற்றுச் சிறுகதைகள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மாணவர்களுக்குப் புறநானுற்றச் சிறுகதைகள்

15


புறாவுக்காகத் தன்னையே கொடுத்த சிபிச் சக்கர வர்த்தியின் மரபிற் பிறந்தவன் நீ”

இந்தச் சிறுவர்கள் யார்?

கிள்ளிவளவன் புலவரைப் பார்த்தான்.

புறாவைப் போன்றவர்கள்...இல்லையா?

வளவன் தலை குனிந்தான்.

மலையமான் உனக்குப் ப்கைவன் அல்லன். புலவர்களை வருத்தும் வறுமைக்குப் பகைவன் அவன். பகுத்துண்ணும் பண்பாளன் அவன். வறுமை என்ற கொலையானையைக் கண்டு கதறும் புலவர்களை அவன் கை தழுவியது. அவன் புதல்வர்கள், இதோ, உன்னுடைய கொலையானை முன் நின்று கதறுகின்றனர்...

வளவன் வாய்விட்டுக் கதறினான்.

“புலவரே, பொறுத்தருளும் புதல்வர்காள், அழாதீர்!” என்று அவர்களைத் தழுவிக் கொண்டான்.

யானை நின்ற இடத்திலே புகழ் நின்றது!


7. ஞாயிறும் திங்களும்...

கதிரவன் எழுகின்றான், வெம்மையைச் சொரிகிறான், சுடுகின்றான். கோடை நாளல்லவா? அவன் கொடுமையைக் கேட்கவா வேண்டும்.

அரசே, நீயும் அத்தகையவன்... கோடைக் கதிரவன் போல் சுடுகின்றாய்...