பக்கம்:மாணவர்களுக்கு புறநானூற்றுச் சிறுகதைகள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மாணவர்களுக்குப் புறநானுற்றச் சிறுகதைகள்

35


இலாமையால் பசியைக் கொண்டனை சுற்றி அலைந்தும் வறுமை தீர்ப்பார் எவருமிலையே என்று சோர்வுற்று நிற்கிறாய்.

நின் நிலையை நான் அறிவேன்..நீ நேரே கிள்ளி வளவனைச் சென்று பார்! அவன் வாயிலில், காத்து நிற்கவேண்டி இராது. அப்படிக் காத்து நிற்பதும், ஒருகால் நிகழலாம். ஆனால், அரசன் உன்னைப் பார்த்து விட்டானோ, பொன்னாற் செய்த தாமரைப் பூவை, உனக்கு அளிக்க மட்டும் தவறான்... “போ... உறையூருக்குப் போ என்று ஆலத்தூர் கிழார் கத்தினார்...

கந்தல் உடை தரித்த நான் எங்கே? பொன்னாற் செய்த தாமரை எங்கே என்று கேட்டான் பாணன்.

“தமிழ் ஆண்டு கொண்டிருக்கும் போது, இசைமாண்டு கொண்டிருக்குமோ? என்று திருப்பிக் கேட்டார் கிழார்.


29. கொடுத்து நீண்ட கைகள்!

கோவூர் கிழார் ஊர்ப்பயணம் சென்றார். நீண்ட வழி. நடந்தார், நடந்தார், வழி மாளவில்லை. இருள் வந்துவிட்டது. எங்கே தங்குவது? என்று சிந்தித்துக் கொண்டிருந்தார்.

அருகிலே, பாணன் ஒருவன் குடியிருந்தான். அவன் புலவரைக் கண்டதும் ஒடோடி வந்தான்...

புலவரே! வாரும், என் சிறு குடிலில் தங்கி இளைப்பாறலாம் என்று அழைத்தான். புலவர் அவன் அழைப்பை மறுக்காது சென்றார்.