பக்கம்:மாணவர்களுக்கு புறநானூற்றுச் சிறுகதைகள்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

84

மாணவர்களுக்குப் புறநானுற்றச் சிறுகதைகள்



யானையைப் பாருங்கள், அது புயலிற் சிக்கிய நாவாய் போன்றும், மீன்களுக்கிடையே திங்கள் போன்றும் ஒடுகின்றது.

சுறாமீனைப் போன்ற வாள் மறவர் அதனைத் தொடர்கின்றனர். ஆயினும், அது காற்றுப் போல் கடுகி விரைகின்றது. பாருங்கள், அதன் கால்கள் நிலத்தில் இல்லை...

கள்ளொழுகும் வளஞ்சார்ந்த நாட்டையுடையவன் கிள்ளி, கள்ளுண்டு மதம் கொண்டது அவன் யானை.

அவனுக்கு ஒரு சிறு துன்பமும் நேராது, பார்த்துக் கொள்க யானையே! இல்லையென்றால் உன் வயிறு, உடைந்த பானையே!


95. “அண்ணனும் தம்பியும்”

போர்க் கோலம் பூண்டு எதிரெதிரே நின்றனர் நலங்கிள்ளியும் நெடுங்கிள்ளியும். புலவர் கோவூர் கிழார் ஓடோடி வந்தார். முதலாவது நலங்கிள்ளியை நாடினார். நலங்கிள்ளியின் இருகரங்களையும் பிடித்துக் கொண்டு ‘அரசே நான் கேட்கும் கேள்விகட்குப் பொறுமையுடன் பதில் கூறுக’ என்றார்.

“உன் கண்ணி?”

“ஆத்தி”

“உன் குலம்?”

“சோழர் குலம்"