பக்கம்:மாணவர்களுக்கு புறநானூற்றுச் சிறுகதைகள்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

88

மாணவர்களுக்குப் புறநானுற்றச் சிறுகதைகள்



101. “பிந்தி வந்தார்”

ஆற்றின் நடுவே ஒரு மணல் திட்டு. இலையற்ற பெரிய மரம் நிற்கிறது. அம்மரத்தடியில் அமர்ந்தான் கோப்பெருஞ் சோழன். வடக்குத் திசை நோக்கி உண்ணா விரதமிருக்கத் தொடங்கினான். நண்பர் சிலர் வந்து அருகே அமர்ந்தனர். பூதநாதனார் ஓடோடி வந்தார். அருகில் அமரப் போனார். மன்னன் உடன்படவில்லை. மன்றாடினார் புலவர். மறுத்துக் கூறினான் மன்னன்.

“மன்னா உன்னோடு சான்றோர் வடக்கிருக்கின்றனர். நானும் அவர்களைப்போல் உடனே வராமல் சிறிது தாமதமாக வந்தேன் என்பதற்காக அனுமதி அளிக்க மறுக்கிறாயோ” என்று வருந்தினார்.


102. “காதல் நன் மரம்”

புலவர் மோசிசாத்தனார் தன் வழியே சென்று கொண்டிருந்தார். வழியின் இருமருங்கும நொச்சி மரங்கள். கொஞ்ச தூரம்தான் போயிருப்பார். இளமங்கை யொருத்தி ஓடிவந்து நொச்சிப் பூவைக் காதலுடன் பறிப்பதைக் கண்டார். பறித்து இடையில் சொருகிக் கொண்டு சிட்டுப்போல் பறந்து விட்டாள்.

மேலும் சிறிது தூரம்தான் சென்றிருப்பார். வீரன் ஒருவன் தலைதெறிக்க ஓடிவந்தான். ஆவலோடு நொச்சிப்பூவைப் பறித்து கண்ணியாகக் கட்டித் தலையில் சூடினான். கச்சை கட்டி யிருந்தான். கையில் வில்லும் இருந்தது கோட்டைக் காவலை மேற்கொண்ட வீரன். பகைவர் தன் நகரைப் பற்றாதபடி நகரைக் காக்கும் பணியில்