76
பிற்பகல் அல்லது எற்பாடு:
பகலின் மூன்ரும் பத்து நாழிகை நேரமே பிற்பகல் அல்லது எற்பாடாம். (பகல் 2 மணியிலிருந்து 6 மணி முடியவுள்ள நேரம்)
திணையும் பெரும்பொழுதும் சிறுபொழுதும்
மருதத்திற்கும், நெய்தலுக்கும் ஆறு காலங்களும், குறிஞ்சிக்குக் கூதிரும், முன்பனியும், முல்லைக்குக் காரும், பாலைக்கு இருவகை வேனிலும் பின்பனியும் உரிய பெரும் பொழுதாம். ■
மருதத்திற்கு வைகறை காலைகளும், குறிஞ்சிக்கு . யாமமும், முல்லைக்கு மாலையும்; நெய்தற்கு எற்பாடும்;
பாலைக்கு நண்பகலும் உரிய சிறு பொழுதாம்.
கருப்பொருள்.
- தெய்வம், உணவு, விலங்கு, மரம், பறவை, பறை செய்தி, யாழ், பண் முதலியன கருப்பொருளாம்.
மருதத்திற்குரிய கருப்பொருள்
தெய்வம் - இந்திரன்
உணவு - நெல் --
விலங்கு - எருமை, நீர் நாய்
மரம் - வஞ்சி, காஞ்சி, மருதம்
பறவை - நாரை, நீர்க்கோழி, தாரா
பறை - - - மனமுழா, நெல்லரிகிணை
செய்தி - நெல்லரிதல், வைக்கோல் துவைப்
- பித்தல், களை பறித்தல்
யாழ் - மருத யாழ்
பண் - மருதம்