பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 6.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

4. இனவெழுத்து

வேலனும் முருகனும் ஒரே வகுப்பில் படிக்கிறார்கள். ஆகவே அவர்கள் இருவரும் ஓரினம். முருகனும் கந்தனும் ஒரே உயரம் உடையவர்கள். ஆகவே அவர்கள் இருவரும் ஓரினம்.

மேற்கூறியபடி ஒருவன் இனொருவனை ஏதாவது ஒன்றில் ஒத்திருந்தால் அவர்கள் இருவரையும் நாம் ஓரினத்தைச் சேர்ந்தவர்கள் என்று அழைக்கலாம். இது போல எழுத்துக்களிலும் இன எழுத்துக்கள் உண்டு.

அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள-என்ற உயிர்கள் பிறப்பிடம், தொழில் முதலியவற்றில் ஒத்து வந்தன.

க, ச, ட, த, ப, ற என்ற வல்லெழுத்தும் ங, ஞ, ண, ந, ம, ன, என்ற மெல்லெழுத்தும் தொழில், அளவு முதலியவற்றில் ஒத்து வந்தன. அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஒ ஓ, க, ங, ச, ஞ, ட, ண, த, ந, ப, ம, ற, ன என்பவைகள் பொருளால் ஒத்து வந்தன.

(உ-ம்) அது, ஆது; இங்கு, ஈங்கு; குளக்கரை, குளங்கரை; அற்பு, அன்பு-இச்சொற்களில் பொருளால் ஒத்து வந்த இனவெழுத்துக்களைக் காணலாம்.