130
ல்ை போதாது. நாட்டின் நலங் கருத வேண்டும். மற்றைய நாடுகளைப்போல் தன் நாட்டையும் ஆக்க வேண்டும்.
தன் நலங்கருதி எவ்வாறு ஒருவன் த க் க நடவடிக்கை எடுப்பானே அவ்வாறு தன் நாட்டின் நலங்கருதி தக்க நடவடிக்கை எடுப்பதே நாட்டுப் பற்ருகும். இ த னை ஒவ்வொருவரும் தமது கடமை யாகக் கொள்ளவேண்டும்.
தன் நாட்டுப் பற்றுடைய உண்மையான ஒருவன் தன் நாட்டின் பொருட்டுத் தனது உயிரையும் கொடுப் பான். ேபார் முனையில் முன் நிற்பான். தன் நாட்டிற்கு வந்த தீமை தனக்கு வந்ததாகவே கொள்
வான்.
சிலர் தம் நாட்டினிடத்துப் பற்று இருப்பதாகப் பாசாங்கு செய்வர். உயர் பதவி, பட்டங்கள் அடைந் ததும் ஒதுங்குவர்; வேதாந்தம் பேசுவர். இவர்கள் நாட்டின் துரோகிகள் ஆவர். எல்லா கட்சியினரும் இவரை வெறுப்பர்.
நாட்டுப்பற்று ஒன்றே மதத்தைப் போக்கும். சாதியை நீக்கும். பணக்காரன் எளியவன் என்ற வித்தியாசத்தை ஒழிக்கும். யாவரையும் ஒரு குடைக் கீழ்க் கொண்டு வரும்,
உயர்திருவாளர்
அ. கி. பரந்தாமர்ை அவர்கள், எம். ஏ.
விரிவுரையாளர், தியாகராசர் கல்லூரி,
மதுரை.