பக்கம்:மாணவர் மாணவியருக்கு நீதிக் கதைகள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

ஒருவன் கையைத் தலைக்கு வைத்துக் கொண்டு நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தான்.

அதைப்பார்த்த செல்வந்தர் நம்மால் அப்படி தூங்க முடியவில்லையே என எண்ணி ஏங்கினார்.

காவலாளியை அனுப்பி, திண்ணையில் தூங்கிக் கொண்டு இருப்பவனை எழுப்பி அழைத்து வரச் சொன்னார் செல்வந்தார்.

காவலாளி சென்று அவனை எழுப்பினான். “இந்த நேரத்தில் ஏன் என்னை எழுப்பித் தொல்லைப் படுத்துகிறாய்?” என்று கேட்டான்.

“அருகில் உள்ள மாளிகையின் முதலாளி, உன்னை அழைத்து வரச் சொன்னார்.” என்றான் காவலாளி.

“என் தூக்கம் கெட்டு விடும். காலையில் வருகிறேன்.” என்றான் அவன்.

“உன்னை கூட்டிக் கொண்டு போகவில்லையானால், என் வேலை போய்விடும்” என்று கெஞ்சி அவனை கூட்டிக் கொண்டு சென்றான் காவலாளி.

வந்தவனைப் பார்த்து, “வெறுமனே தரையில் ஆழ்ந்து தூங்குகிறாயே, அது எப்படி? நானோ பஞ்சணை, பட்டு மெத்தை, மின் விசிறி, இவற்றோடு படுத்தும் எனக்குத் தூக்கம் வரவில்லையே, அதைத் தெரிந்து கொள்ளவே உன்னைக் கூட்டி வரச் சொன்னேன்” என்றார் செல்வந்தார்.

“ஐயா, நீங்கள் பணக்கார வர்க்கம். மேலும், மேலும் பணத்தைச் சம்பாதிப்பது எப்படி என்ற சிந்தனையிலேயே மூழ்கிக் கிடக்கிறீர்கள். தவிர வாழ்க்கையில் உங்களுக்கு எல்லாம் மனநிறைவு என்பதே கிடையாது. நாங்களோ உழைப்பாளி வர்க்கம்.