பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/341

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அருளிச் செயல்களில் அடிகள் 323



  நாட்டார் நகைசெய்ய
     நாமேலை வீடெய்த
  ஆட்டான்கொண் டாண்டவா
     பாடுதுங்காண் அம்மானாய் (180)                                     
                                    --திருவம்-6 
     பேணு பெருந்துறையில் 
  கண்ணார் கழல்காட்டி
     நாயேனை யாட்கொண்ட 
  அண்ணா மலையானைப்
     பாடுதுங்காண் அம்மானாய் (184)
                                   --திருவம்-10 
     சீரார் பெருந்துறையில் 
  எளிவந் திருந்திரங்கி
     'எண்ணரிய இன்னருனால் 
  ஒளிவந்தென் உள்ளத்தின்
     உள்ளே ஒளிதிகழ 
  அளிவந்த அந்தணனைப்
     'பாடுதுங்காண் அம்மானாய் (192)
                                   --திருவம்-18 

என்ற திருவம்மானைத் திருப்பாடற் பகுதிகளால் இச்செய்தி தெளிவாகின்றன.

     இன்னும், 
  அருவாய் மறையில்
     அந்தணனாய் ஆண்டுகொண்ட 
  திருவான தேவற்கே
     சென்றுதாய் கோத்தும்பி (228) 
                               -திருக்கோத்.14 

என்ற திருக்கோத்தும்பிப் பாடலாலும்

  உருநா மறியவோர்
     அந்தணனாய் ஆண்டு கொண்டான் (235)
                                     -திருத்தெள்-1 

என்ற தெள்ளேனப் பாடற் பகுதியாலும்,