இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அருளிச் செயல்களில் அடிகள் 323
நாட்டார் நகைசெய்ய நாமேலை வீடெய்த ஆட்டான்கொண் டாண்டவா பாடுதுங்காண் அம்மானாய் (180) --திருவம்-6
பேணு பெருந்துறையில் கண்ணார் கழல்காட்டி நாயேனை யாட்கொண்ட அண்ணா மலையானைப் பாடுதுங்காண் அம்மானாய் (184) --திருவம்-10
சீரார் பெருந்துறையில் எளிவந் திருந்திரங்கி 'எண்ணரிய இன்னருனால் ஒளிவந்தென் உள்ளத்தின் உள்ளே ஒளிதிகழ அளிவந்த அந்தணனைப் 'பாடுதுங்காண் அம்மானாய் (192) --திருவம்-18
என்ற திருவம்மானைத் திருப்பாடற் பகுதிகளால் இச்செய்தி தெளிவாகின்றன.
இன்னும், அருவாய் மறையில் அந்தணனாய் ஆண்டுகொண்ட திருவான தேவற்கே சென்றுதாய் கோத்தும்பி (228) -திருக்கோத்.14
என்ற திருக்கோத்தும்பிப் பாடலாலும்
உருநா மறியவோர் அந்தணனாய் ஆண்டு கொண்டான் (235) -திருத்தெள்-1
என்ற தெள்ளேனப் பாடற் பகுதியாலும்,