100
பல்லினக் காண்பார் பலரும் முல்லை அரும்போ !” என்று வருணித்தனர். மொழியைக் கேட்டவர் - தேனிளம்பதமோ !” எ ன் று மோகங்கொண்டு மொழிந்தனர். அழகைப் பார்த்தவர் பவழமோ !” என்று துதித்தனர். நுதலினக் கண்ட நுண் ணறிஞர் பலரும் திங்கட்கொழுந்தோ !” என்று கூறித் திளைத்தனர். புருவங்கண்டு புதுமையடைந் தோர் கருவேள் கையகத்துக் கொண்ட கார்முக வில்லோ!' என்று போற்றினர்.
இவ்வாறு பரவையார் எழிலே உருவாய் இலங்கி வளர்ந்து மங்கைப் பருவமுற்று மாண்புடன் வாழ்ந் தனர்; இசையில் வல்ல வசையில் வனிதையராய்ப் பனிமலை வல்லி (பார்வதி) பா தம் அன்புருகப் பாடும் பணியை மேற்கொண்டனர்; பிறந்து மொழி பயின்ற பின் எல்லாம் பூங்கோயிற் புனிதரை மறவாது ஆலயஞ்சென்று சாலவும் தொழுது வந்தார்; ஒரு நாள் பாங்கியர் சூழத் திருக்கோயிலைச் சேர்ந்தார்.
நம்பியாரூரர் தில்லைப்பதியினின்றும் நீ ங் கி இடைப்பட்ட நல்ல பதிகள் பலவும் போற்றித் திரு வாரூர்த் திருநகரையடைந்தார். வழுக்கி வீழினும் இறைவன் பெயரை அல்லாது எதையும் கூரு உர முடையவர் ஆதலின், அவரும் பெருமான் கண்ணு தல் கழலினைப் பரவிப் பணிய வந்திருந்தார்.
ք5ற்பெரும்பான்மைதன் ல்ை பரவையாரைப் பாவலர் பெருந்தகையார் பார்த்ததும் அவரை மனக் கக் காதல் கொண்டனர்.