பக்கம்:மாண்புடைய மங்கையர்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37

ஈண்டுச் சேக்கிழாரின் சீரிய புலமையை நாம் போற்ருதிருக்க ஒண்ணுது. சேக்கிழார் பெருமானுச் திகழ்ந்த காலம் கி. பி. 12ஆம் நூற்ருண்டு என்பது வரலாற்ருசிரியர் உறுதிப்படுத்திய உ ண் ைம. ஆகவே, அவர் இற்றைக்கு ஏறக்குறைய எண்ணுாறு ஆண்டுகட்கு முன்பிருந்த மூதறிஞர் என்பது தெளி வாம். அம்மூதறிஞர் இக்காலத்து நவீனம் எழுது முறைப்படி இவ்வரலாற்றினை எழுதியிருப்பாராயின், அவரது எழுத்துப் புலமையை என்னென்று இயம்பு வது! இக்காலத்தில் நவீனம் எழுதுவோர் கையா ளும் பல்வேறு கைத்திறன்களுள் ஒன்று, தாம் தொடங்கும் கதைக்குரிய நாயகன் பெயரை விரை வில் கட்டிக்காட்ட மல், அவனுடைய செயல்களை மட்டும் பல பக்கங்களில் எழுதிச் சென்று திடுமென ஓர் இடத்தில் சுட்டிக் காட்டுவதாகும். அதனைப் படிப்போர், ‘ ஆ, ! இதுவன்ருே நவீனத்தின் நயம் ! இப்படியன் ருே எழுதுதல் வேண்டும்!” என்று வியப்புறுவர். இம்முறை பண்டையது; புதுவதன்று: காவிய உலகில் காணப்படுவது. சேக்கிழார் என்னும் நாவலாசிரியர் அப்பூதியடிகளாரைப் பற்றிப் பேசப் புகுந்து, முன் செய்யுள்களில் அவர் பெயரைப் பற்றி யாதும் கூருது ஏழாவது செய்யுளில் அறிவிப்பார் ஆயினர். இஃது ஒன்றே சேக்கிழாரின் சீரிய கூரிய மதி நுட்பத்திற்குச் சான்று அன்று. அவர் எழுதியுள்ள நூலே எப்பக்கம் புரட்டினும், எச்செய் யுளைப் படிப்பினும் இன்னேர் அன்ன நயங்கள் மலிந்து காணக்கிடக்கின்றன. அவற்றை அவர் நூலிற்கண்டு இன்புறுதல் நம்மனுேர் கடமை யாகும். இது நிற்க.