பக்கம்:மாண்புடைய மங்கையர்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44

திருந்திய கருத்தே அத8ன வெளியிடாது செய்தது. மகனறிவு தந்தையறிவு, அன்றே? வி ைர யொன்று இடச் சுரையொன்று காய்க்குமோ?

தரைமிசைத் தளர்ந்து வீழ்ந்த தனயரைப் பெற். ருேர் கண்டனர்; மேனியில் விளங்கிய குறியைக் கண்டு விடத்தினுல் மயங்கிளுர் என்பதை விளங் கிக்கொண்டனர் ; உளம் பதைத்து நொந்தனர்; உடனே துன்பம் ஒழிந்து, தொண்டர் அமுது செய் வதற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்யலாயினர்.

ஈண்டுச் சேக்கிழார் பாடிய திறத்தையும் பார்க்க வேண்டும். தாயாரும் தந்தையாரும் உளம்பதைத் தனர் என்று சேக்கிழார் கூறி, உட்னே துளங்குதல் இன்றி, என்று கூறியது முறையோ எனில், இரண் டும் முறையேயாம்.

'கடந்து ளோர்களும் கடப்பரோ மக்கள் மேற் காதல் ?”

என்னும் உரைக்கிணங்க மகன் இறந்தான் என்றதும் மக்கள் பண்புக்கிணங்க இரங்கத்தான் வேண்டு. மன்ருே? அதிலும் இருமுதுகுரவர் தாம் ஈன்ற மகனே இறந்தான் என்ற போது கலங்காதிருப்ப ரேல், அன்னர் உள்ளம் மக்கட்பண்புக்கியைந்து பக்குவப்பட்டதன்று என்ற பழிச்சொல்லே உலகம் பகரும். ஆகவே, அவர்கள் உள்ளம் பதைத் து உறுதுயர் உற்றது பொருத்தமே ஆகும். உடனே அவர்கள் துளங்குதல் இன்றித் தொண்டர் அமுது செய்யச் சூழ்வுற்றது, அவர்களது தொண்டின் வன்மையை வற்புறுத்திக் காட்டுகிறது.