பக்கம்:மாண்புடைய மங்கையர்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

இம்முறையில் பாங்கில் வரும் மனையறத்தின் பண்பு வழாமையில் அவ்விருவரும் பயில்வார் ஆனர். ஆனல், புனிதவதியார் சிவபெருமான் திருவடிக்கீழ் உணர்வு மிக ஒழுகினர்.

"உத்தியோகம் புருட லட்சணம்’ என்பது முது மொழி. ஆகவே, பரமதத்தன் காரைக்காலில் அங் காடி ஒன்றை அழகு பெற அமைத்துப் பொருளிட்டி வந்தனன். ஒரு நாள் அவன் நண்பர் ஒருவர் அவ. கனக் காண அங்கு வந்து சேர்ந்தார். நண்பர், பெரி யார், குழந்தைகள், தெய்வம் ஆகியவர்களைக் காணச் செல்பவர் வெறுங்கையுடன் செல்வது முறையன்று; ஏதேனும் ஒன்றைக் கையுறையாகக் கொண்டு செல்லுதல் மரபாகும். அம்முறையில் பரமதத்தனைக் காண வந்தவர் மாங்கனி இரண்டை மனங்கனிந்து கொணர்ந்து ஈந்தனர். கனி பெற்ற காளேயாம் பரமதத்தன், அவற்றை இல்லத்துச் சேர்க்க ஏற்பாடு செய்து, தன் பணியின் மீது ஊக்க மாய் இருந்தான்.

இந்நிலையில் ஓர் அடியவர் பசிமிக உடையராய், உணவின் மிகு வேட்கையராய், புனிதவதியார் அகம் புகுந்தனர். வந்த விருந்தினரை அம்மையார் விருப்புடன் வரவேற்றனர்; பாதங்களை விளக்க நீரைப் பண்புடனே முன்னளித்தார் ;

'உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத்தோர்’

ஆதலின், அழிபசி தீர்க்கப் பரிகலம் திருத்தி இன் ண்டிசில் படைத்திட்டார். விருந்தனர் வந்த வேளை

திருவமுது செய்திருக்கக் கறியமுது மட்டும் செய்து