80
பெயருடைய வேளாளர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் உழுதுண்டு வாழும் உத்தமத் தொழிலால் ஊதியம் பெருக்கிச் சிறக்க வாழ்ந்தனர். அவர் நாள்தோறும் தம் இல்லம் நோக்கி வரும் வறியர்க் கும், எளியர்க்கும், இறைவரின் திருநாமம் கூறும் திருக்கூட்டத்தினர்க்கும், மங்கள வேடம் பூண்ட மாட்சியையுடையவர்க்கும் சோ று ம் கூறையும்: சோராது அளித்து வந்தார். அவர்க்கு அடியார் பத்தி அதிகம். எவரையேனும் அவர் காண நேரி டின், அவரை வீட்டிற்கு அழைத்து வருவார் ;
' கொண்டு வந்து மனப்பு குந்து
குலாவு பாதம் விளக்கியே
மண்டு காதலின் ஆத னத்திடை வைத்த ருச்சனை செய்தபின்
உண்டி காலு விதத்தில் ஆறு
சுவைத்தி றத்தினில் ஒபபிலா
அண்டர் நாயகர் தொண்டர் இச்சையின்
அமுது செய்ய அளித்துளார்.”
அவர் இம்முறையில் தம் கடமையை ஆற்றி வரு வார் ஆயினர். அவர் தம் நன்செய் நிலங்கள் நல்ல பலனை அளிக்க அவர் அளகேசன் நிகராக வாழ்ந்து இல்லறத்தை இனிது நடத்தி வந்தார்.
மக்கள் இயல்பு, தமக்கு மாண்பொருள் உள்ள காலத்தில் அறச்செயல்களைச் செய்வதாகும். அது குறைவுற்றபோது தருமம் செய்யச் சிறிது தளருவர். அடுத்துக் கேட்டாலும், ' தனக்கு மிஞ்சித்தானே தருமம்?’ என்று பழமொழி கூறிப் பரிகசிப்பர். ஆணுல், வறுமையிலும் செம்மையுடையவராய்த்