பக்கம்:மாண்புடைய மங்கையர்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. மனையை மங்கலம் ஆக்கிய மாதரார்

மாதரார் பூங்கொடியனையார் என்று புலவர்கள் புனைந்து கூறுதல் உண்டு. கொடி கொழுகொம்பு இன்றிப் படராது. அது போல, மாதராம் பூங்கொடி யும் ஒரு கொழுகொம்பு பற்றியே படர்தல் வேண்டும். அவர்க்குக் கொழுகொம்பாகிக் குலவி வருவோர் அவர் அவர் மணந்த கணவன்மார் அன்றி, வேறு அல்லர். ஆகவே, பூவையர்க்குக் கணவர் பெருந் துணை வர் என்பது அறியக் கிடக்கின்றது. அவர் இ ன் ேற ல், வாழ்வு இல்லை; சீர் இல்லை; சிறப்பு இல்லை; கேளும் (நண்பர்கள்) இல்லை; கிளேயும் (உறவினரும்) இல்லை; ஒருகால் இருப்பினும், உப சாரம் ஆகுமே அன்றி உரிமையுடையவர் ஆகார். இதனுலேதான்

கொண்டானின் துன்னிய கேளிர் பிறர்இல்லை ' என்றும்,

" கணவனை இழந்தோர்க்குக் காட்டுவதில் ’’

என்றும் தமிழ் நூல்கள் சாற்றுகின்றன. இது கருதியே தலையன்புடைய பெண்டிர் கணவர் இறந் ததும் உடன்கட்டை ஏறும் வழக்கமும் கொண்ட னர். உடன் கட்டை ஏற வந்துநின்ற கோமகளேத் தடுத்த பெரியவர்களைப் பழித்தும் உரைத்துள்ளார் நம் நாட்டுக் கற்புடைய காரிகையர்.