91
இந்நிலையில் இறைவளுர் இவ்விருவரையும் ஒன்று சேர்க்க உளம் கொண்டார். எல்லாம் வல்ல இறைவர் ஆதலின், ஏயர்கோளுர்க்கு வாடுறு சூலைநோய் வந்து அணுகவே எண்ணங்கொண்டார். அடியரை ஆட்கொள்ளும் முறையில் அங்கணர் மேற்கொள்ளும் வழிவகைகட்கு ஒர் அளவு இல்லை. ஒருவற்கு ஞான அமுது உதவுவர்; ஒருவர்க்கு நாட்டிற்கிலாத குடர் நோய் நல்குவர். அஃது அவர் செய்யும் ஆடல் ஆகும். இதல்ை அ ன் ேரு, அவரை அலகிலா விளேயாட்டுடையான் என்று அறிஞர் அறிந்து கூறினர் ?
கலிக்காமரைச் சூலை நோய் பற்றியது. சூலை மிகக் கொடியநீேrய். அந்நோய் வடவனலும், கொடுவிடமும், வச்சிரமும் போல வா த இன யை ச் செய்ய வல்லது. அது கொடிய எலாம் ஒன்ருகும் கொடுமையைக் கொண்டது. அந்நோயின் கொடு மையை யார் கூற இயலும்? அதனைத் துய்த்த பொறுமையாளர் அல்லரே கூற இயலும்? அது தம்மை வாட்டிய விதத்தை அப்பர் பெருமாளுர் அகம் உருகித்
தோற்றதென் வயிற்றின் அகம்படியே
குடரோடு தொடக்கி முடக்கியிட ஆற்றேன் !"
என்றும்,
கஞ்சாகி வந்தென்னை நலிவது என்றும்,
- வேர்த்தும் புரண்டும் விழுந்தும் எழுந்தால்
என்வேதனை யான விலக்கியிடாய்
என்றும் கசிந்து பாடியுள்ளார்.