பக்கம்:மாத இதழ் கட்டுரைகள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருத்து, திருக்குறளிலே இருக்கின்றதா என்று பார்த்துக் கொள்ளலாமே தவிர, ஒவவொரு மதத்திற்கும் அது சொந்தம் என்று கூறும் துணிவுடையோர் இன்னும் பிறக்கவில்லை என்பதை உணர வேண்டும். ஏனென்றால், திருவள்ளுவரது சிந்தனை- கருத்து வண்ணங்கள் - இதுவரையில் ஆய வு நிறக் கலையரில் தேர்ந்தவனுக்கே தடுமாற்றத்தைத் தருகின்றது. திருக்குறள் என்பது ஒரு வண்ண ஜாலம் நாத மர்மம் கருத்துச் சூழல் சிந்தனை மயக்கம் அறிவரின் சோதனை தேர்வு பெற முடியாத தேர்தல் குறி பார்த்தடிக்க முடியாத குறி!. விஞ்ஞான ஆய்வுக்கே ஏற்பட்ட பெரலட்டிக் - அதாவது பாரிச வாப் வு! மேலும், ஒரு படி தாண்டிச் சொல்லப் போனால், மனிதன் உரை எழுதித் தெளிவு பெற வேண்டிய நூலல்ல - திருக்குறள்: மனித சக்திக்கு அப்பாற்பட்ட ஒருவன் - இனி பிறந்தால் பரவாயில்லை என்று நினைக்கின்றேன்! ஏனென்றால், உரைகள் கலவரத்தில் முடிகின்ற காரணத்தை வைத்து, அய்யன் திருவள்ளுவருக்குப் பின் வந்த ஆராய்ச்சி நூல்கள், பொருள் வரிசாரணை நூல்கள், மனோதத்துவ நூல்கள், வரிஞ்ஞான நூல்கள் அனைத்தையு ம் கரைத்துக் குடித்த ஒருவன் கடிட - திருக்குறளுக்கு நேரிடையாகப் பொருள் கூற முடியவில்லையே ஏன்? ஏனென்றால், தமிழுக்கு உயிர் நூல்களை எழுதிய தன்னேரிலா அறிவு அரிமாக்கள் அனைவரும் - சூத்ர வடிவில், யாப்பு செய்யுள் வடிவில், நுட்பம் செறிந்த செஞ் சொற்களைப் பெய்து, மந்திரம் - மறை போன்ற பொருளாட்சிகளைப் புதையல் போல் வைத்துள்ளார்கள். திருவள்ளுவம் என்றால் என்ன என்பதை நீங்கள் கூற வேண்டும். உங்களது எல்லையிலே இருந்து அதுவராமல், உலக எல்லையிலே இருந்து வரவேண்டும் என்று எதிர்பார்க்கின்றேன். எனவே, மனிதன் என்பவன் எந்த நூலை எழுதினாலும், படித்தாலும், கேட்டாலும், மாசிலா மனமுடையவனாக இருந்தால்தான், எதை அவன் கேட்கிறானோ, அதன் உண்மைப் பொருளைக் காண முடியும். இவ்வாறான மறை பொருட்கள் திருக்குறளிலும் உண்டு அவற்றை ஆழ்ந்து கர்ந்து, ஒள்ந்து படிக்க வேண்டிய பொறுப்பு தமிழறிவுடையான் கடமை அல்ல - உரிமை! தமிழ் மொழியில் அத்தகைய சங்க கால நான்மறைகளும், தமிழ் மறைகளும், திருமந்திரங்களும், பாசுரங்களும், அறச்சொற்களும் ஏராளமாக உள்ளன. அவற்றின் உண்மைப் பொருளை அறிய வேண்டுமானால், அதாவது மனிதன் மனம், முழுக் முழுக்க ஒன்றும் இல்லாமல் மாறினாலொழிய, தன் நெஞ்சில் ஒரு துளியும் மதக் கருத்து, சாதிக் திகருத்து, நாகரிகக் கருத்து, பண்பாட்டுக் கருத்து இல்லாமல் மாறினாலொழிய, திருக்குறளுக்கு உண்மைப் பொருளைக் காண முடியாது. 12