பக்கம்:மானங்காத்த மருதுபாண்டியர்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழிலே இன்னும் அதிகமாகத் தழைத்து நம் மக்களிடத்தே துரிதமாய்ப் பரவிவரும் தமிழ்ப்பற்றைத் தாங்க வேண்டும் என்ற எண்ணம் என் உள்ளத்தில் வெகு காலமாய்த் தோன்றிக் கொண்டேயிருக்கிறது. இவ்வெண்ணம் செயலில் அமையப் பல எழுத்தாளர்கள் முன் வரவேண்டும். இவர்களுக்கு எல்லாம் சிறந்த முன்னோடியாய் அன்பர் ந. சஞ்சீவி திகழ்வதைப் பற்றி நான் தமிழ்த்தாயை வாழ்த்துகின்றேன். சென்னைப் பல்கலைக்கழகம், 11-1-1956 மு. ஆரோக்கியசாமி