பக்கம்:மானங்காத்த மருதுபாண்டியர்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மானங்காத்த மருதுபாண்டியர் 16 வெள்ளையரால் வீரபாண்டியனைத்தான் கொல்ல முடிந்தது. ஆனால், அவன் குறிக்கோளைக் கொல்ல முடியவில்லை. அவன் சிந்திய குருதியும், செய்த தியாகமும் மிகப்பெரிய விடுதலைப் போராய்ப் பின்னாளில் உருக் கொண்டன. அதன் விளைவாக, பிரிட்டிஷ் பேரரசு அழிந்தது; ஆனால், அவன் புகழ் அழியவில்லை; அழியவும் இயலாது. வீரபாண்டியக் கட்டபொம்மனைத்துக்கிலிட்டுக் கொன்றது வாயிலாக அவன் மூட்டிய தீ - பெருந்தீ - அணையாத்தீ - அணைந்துவிட்டதாகவே எண்ணினார்கள் வெள்ளை அதிகாரிகள். ஆனால்.......... o