பக்கம்:மாயக் கள்ளன்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

32 முதலில் அவள் பதில் பேசவில்லை. முத்து திருப்பித் திருப்பி அவளைக் கேட்டுக்கொண்டே இருந்தான்.

‘முத்து, டன்ன மக் கென்று எல்லோரும் சொல்லுகிறார்கள். அதைக் கேட்டுத்தான் எனக்கு அழுகை வந்துவிட்டது' என்று தாய் சொன்னாள். மே அதைக் கேட்டு முத்து மிகவும் வருத்த மடைந்தான். தான் மக்கல்லவென்று தாய்க் குக் காட்ட வேண்டு மென்று ஆசைப்பட்டான். தான் கெட்டிக்காரன் என்று பெயர் வாங்காமல் வீட்டுக்குள் நுழைவதில்லை என்று அவன் தீர்மானம் செய்துகொண்டு தாயிடம் சொல்லாமல் வெளியே கிளம்பினான். வெளியே இருட்டாக இருந்தது. அதைப்பற்றி அவன் கவலைப்படாமல் கால் போகின்ற திசையிலேயே போகலானான். சடையன் அவன் பின்னால் ஓடி வந்தது. 'சடையா, நீ வீட்டுக் குப் போ. நான் கெட்டிக்காரனாக ஆன பிறகு திரும்பி வரு கிறேன்' என்து அவன் அதை விரட்டினான். ஆனால்,சடையன் திரும்பிப்போகாமல் பின்னாலேயே வந்துகொண்டிருந்தது. முத்து ஒரு கல்லை எடுத்து அதன்மீது வீசினான். அப்பொழுதும் அது போகவில்லை. கல்லடியை வாங்கிக்கொண்டு முணு முணுத் துக்கொண்டே அது பின்னால் வந்தது. சடையனுடைய ஆசையைக் கெடுக்க அவனுக்கு மனம் வரவில்லை. "சரி, வா, சடையா, நீதான் எனக்குத் துணை' என்று அவன் அன்போடு சொன்னான். சடையன் வாலைக் குழைத்துக்கொண்டு மகிழ்ச்சியோடு அவனோடு சென்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாயக்_கள்ளன்.pdf/35&oldid=1276990" இலிருந்து மீள்விக்கப்பட்டது