பக்கம்:மாயத்தை வென்ற மாணவன்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வேற உன் மகளை மூளியம்மனுக்குப் பலியிட வேண்டும்.

"உன்மகளைக் கொண்டு செல்வதற்காகவே நான் ஓடோடி வந்தேன். ஆகவே மறுக்காமல் உன் மகளைக் கொடுத்துவிடு" என்றான் மந்திர வாதியான அந்த மனிதன்.

"அடே மந்திரவாதி உன்னைப் பார்த்த உடனேயே உனக்கு எதுவும் கொடுப்பதில்லை என்று நான் முடிவு கட்டிவிட்டேன். உன் விளக்கத்தைக் கேட்டபிறகு அந்த எண்ணமே எனக்கு உறுதிப்படுகின்றது. உனக்கு என் மகளைத் தரமுடியாது. நீ தெரிந்ததைப் பார்த்துக் கொள்" என்று உறுதியான குரலில் கூறினார் மாமன்னர்.

இதைக் கேட்ட மந்திரவாதி பற்களை நறநறவென்று கடித்தான்.

"ஏ, அரசனே! நீ மண்டலங்களை ஆளுகின்ற மன்னர்களையெல்லாம் கட்டியாளுகின்ற மாமன்னாய் இருக்கலாம். ஆனால், நான் மந்திரங்களையும் பேய்களையும் பூதங்களையும் கட்டியாளுகின்ற மந்திரவாதி என்பதை மறந்து

16’