பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

235

பெருமை, நாணயம், திறமை முதலியவற்றை நீங்கள் தெரிந்து கொள்ளாததே இதற்கெல்லாம் காரணமன்றி வேறல்ல. அவர்களுடைய புஸ்தகங்களை நீங்கள் படித்து அவர்களுடைய அரிய செய்கைகளை உணர்ந்திருந்தால், அதன்பிறகு உங்களுக்கு அவர்களிடத்தில் சரியான மதிப்பும் மரியாதையும் ஏற்படும். ஒருவரை ஒருவர் சரியானபடி அறிந்து கொள்ளாமல், காரணம் இல்லாமல், அன்னிய நாட்டார் என்கிற ஒரு முகாந்திரத்தை வைத்துக் கொண்டே அவர்கள் விஷயத்தில் அருவருப்புக் கொள்வது அறிவாளிகளுக்கு அழகல்ல. அன்னிய நாட்டு வஸ்துக்கள் உங்களுக்குப் பிடிக்காவிட்டால், விட்டுவிடுங்கள்; அதைப்பற்றி நான் உங்களை வற்புறுத்துவது சரியல்ல என்பது எனக்குத் தெரியாததல்ல. வெள்ளைக்காரர் எல்லா விஷயத்திலும் நிரம்பவும் சுத்தமாகவும் ஜாக்கிரதையாகவும் இருக்கக் கூடியவர்கள். முக்கியமாய் ஆகார விஷயத்தில் அவர்கள் மகா கண்டிப்பாய் இருப்பவர்கள். சீமையில் ரொட்டிக் கடைகள் முதலியவைகளைத் தணிக்கை செய்வதற்கு எத்தனையோ சர்க்கார் சிப்பந்திகள் ஏற்படுத்தப்பட்டிருக்கிறார்கள். தேக ஆரோக்கியத்தை பாதிக்கத்தக்க வஸ்து ஏதாகிலும் இருந்தால், கடைக்காரர்கள் தண்டனைக்கு ஆளாவார்கள். இந்த பிஸ்கோத்துகள் இந்த உலகம் முழுதும் பரவி விற்கப்படுவதால், இவைகளைச் செய்து இதனால் அபாரமான லாபத்தைச் சம்பாதிப்பவர்கள் தங்களுடைய பிழைப்பு அழிந்து போகக்கூடிய காரியத்தை ஒரு நாளும் செய்ய மாட்டார்கள். இதில் ஆட்சேபகரமான வஸ்துக்கள் சேர்ந்திருக்கும் என்று நினைப்பது மனப்பிரமையே அன்றி வேறல்ல. நீங்கள் நம்முடைய தேசத்து நாகரிகத்தைப் பற்றி அபாரமாகப் புகழ்ந்து கொள்கிறீர்களே. இந்த பிஸ்கோத்து, பெப்பர்மெட் முதலிய தின்பண்டங்களைப் போல நீடித்த காலம் கெடாமல் இருக்கத் தக்கபடி செய்ய நம்மவருக்கு வழி தெரியுமா? நம்மவர்கள் செய்யும் பலகாரம் மறுநாளே ஊசிப்போகிறது; மூன்றாம் நாள் நூல் நூற்றுக் கொள்வதோடு காளான் நிறைந்து போகிறது. இப்படி உலகத்தில் உள்ள நாடு முழுதும் பரவி நெடுங்காலம் ருசி மணம் முதலியவை கெடாமல் எல்லோராலும் ஆசையாய் விரும்பப்படும் வஸ்து எதையாவது நம்மவர்கள்