பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* 12 மாயா விநோதப் பரதேசி பொய் வேஷமும், வஞ்சக வடிவமுமாக அல்லவா முடிந்தது. அதுவுமன்றி, அந்தக் கந்தசாமியினிடத்திலும், அவனைச் சேர்ந்த வர்களிடத்திலும் நான் கொண்டுள்ள ஜென்ம விரோதத்தையும், அவர்கள் விஷயத்தில் பழி தீர்த்துக் கொள்வதற்கு நான் செய்துள்ள சதியாலோசனை முழுதையும் அவனிடம் நான் என் வாயினா லேயே வெளியிட நேர்ந்ததே ஆகா! என்ன விபரீதமான துரதிர்ஷ்டம் இது என் பகைவனான அந்தக் கந்தசாமியை நான் உண்மையிலேயே பெண் என்று நினைத்து அவனை சோபன அறையில் வைத்துக் கொண்டு, அவனிடம் காமவிகாரமான வார்த்தைகளை எல்லாம் சொல்லி நிரம்பவும் கேவலமாக நடந்து கொண்டு விட்டேனே! அதை நினைக்க நினைக்க, நாக்கைப் பிடுங்கிக் கொண்டு பிராணனை மாய்த்துக் கொள்ள வேண்டும் போலிருக்கிறதே! அவன் கந்தசாமி என்பது தெரியாமல் போய் விட்டதே! தெரிந்திருந்தால், இன்னார் தான் செய்தார்கள் என்ற குறிப்பே இல்லாதபடி, அவனுடைய கண்கள் இரண்டையும் தோண்டி எடுத்துவிட்டு, அவனைக் கொண்டு போய் மன்னார் குடியில் உள்ள அவனுடைய வீட்டுத் திண்ணையில் படுக்க வைத்துவிட்டு வரச் செய்திருப்பேனே! கொஞ்சத்தில் ஏமாறிப் போய்விட்டேனே! மனோன்மணியை அபகரித்து வர எத்தனித்த திலிருந்து இப்படிப்பட்ட விநோதமான விபரீதங்கள் நேர்ந்து விட்டன. வேலாயுதம் பிள்ளை முதலியோரை மூளரிப்படுத்த ஆள்களை அனுப்பினால், அவர்கள் எனக்கு உயிருக்குயிரான மனிதர்களை மூளிப்படுத்தி விட்டதோடு, தாங்களும் அகப்பட்டுக் கொண்டு விழிக்கிறார்கள். அவர்கள் தாங்கள் கெட்டதுமன்றி என்னையும் சந்தியில் இழுத்து விட்டு விடுவார்களோ என்னவோ தெரியவில்லை. ஆனால், அந்த ஆள்களை நான் பார்த்ததில்லை. என்னையும் அவர்கள் பார்த்ததில்லை. தங்களை இடும்பன் சேர்வைகாரன் அனுப்பியதாக அவர்கள் ஒப்புக்கொள்ள நேருமே யன்றி நான் அனுப்பியதாகச் சொல்ல மாட்டார்கள்; இடும்பன் சேர்வைகாரன் என் விஷயத்தில் நிரம்பவும் மனவுறுதியுடையவன்; தன்னை அவர்கள் அணுவணுவாய் வெட்டிச் சித்திரவதை செய்தால் கூட, அவன் என்னைக் காட்டியும் கொடுக்கமாட்டான். எந்த ரகசியத்தையும் வெளியிடவும் மாட்டான். இடும்பன்