பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 113 சேர்வைகாரனுக்கும், அவனுடைய ஆள்களுக்கும் நேர்ந்த கெடுதலைக் காட்டிலும், ரமாமணியம்மாள் முதலியோருக்கு நேர்ந்த கெடுதல் மகா விபரீதமானதாகவும் ஆறாத்துயரத்தை விளைவிக்கக் கூடியதாகவும் இருக்கிறது. ஐயோ! அவளுடைய அற்புதமான அழகென்ன! முகவசீகரம் என்ன! அவளுடைய மூக்கு அடியோடு போய்விட்ட தென்றால், மனசால் நினைக்கும் போதே, அது பயங்கரமாகத் தோன்றுகிறதே. பலவகையில் இன்பக் களஞ்சியமாக இருந்த அவளுடைய முகத்தை இனி கண்ணால் பார்க்காமல் இருப்பதே பரம இன்பம் என்று எண்ணும் படி ஆய்விட்டதே. என் பொருட்டு அவள் இந்தக் காரியத்தில் தலையிட்டு, சூர்ப்பனகை அடைந்தது போல, என்றைக்கும் தீராத மானபங்கம் அடைந்து விட்டாளே! அவளை நான் அவளுடைய ஆயிசுகால பரியந்தம் கைவிடாமல் காப்பாற்றக் கடமைப் பட்டவ னாகி விட்டேனே! நான் வேறே எந்தப் பெண்ணையும் கட்டிக் கொள்ளாமல் இருந்துவிட வேண்டும் என்றும், அவளையே நான் என்னுடைய சொந்த மனைவி போல வைத்து நடத்த வேண்டும் என்றும் ஆரம்பத்தில் இருந்தே அவள் சொல்லி என்னை உபத்திரவித்துக் கொண்டு வந்தவளாயிற்றே இப்போது அவள் அதே கருத்தை முன்னிலும் அதிக பாத்தியதையோடு வற்புறுத்தி வெளியிட்டு என்னை வதைக்க ஆரம்பிப்பாளே! அதற்கு நான் இணங்கவும், கடமைப் பட்டவனாகி விட்டேனே. இணங்காவிட் டாலும், அவள் என்னுடைய ரகசியங்களை எல்லாம் வெளியிட்டு என்னை சந்தியில் இழுத்து விட்டுவிடுவாளே, அதற்காக பயந்து மூக்கில்லாத பெண்ணோடல்லவா நான் கடைசி வரையில் இருந்து வாழ வேண்டும். ஆகா! என் அதிர்ஷ்டம் இப்படியா முடிந்தது! அவள் மூக்கறைச்சி; நான் முடவன் இரண்டு பேருக்கும் பொருத்தம் சரியாகவே இருக்கிறது! பெண் சகலமான லட்சணங்களும் வாய்ந்து அப்லர ஸ்திரிபோலவும் கந்தருவ ஸ்திரீபோலவும் இருக்க வேண்டும் என்றும், இந்த உலகத்தில் மற்றவர் அனுபவிப்பதை விட லட்சம் மடங்கு விசேஷமான இன்பத்தை அனுபவிக்க வேண்டும் என்றும் நான் நினைத்து மனக்கோட்டை கட்டிய தெல்லாம் இப்படியா முடிய வேண்டும். எனக்கு ஈசுவரன் ஏராளமான சம்பத்தையும், செல்வாக்கையும், மாடமாளிகை infr.sol.L.HH-8