பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 மாயா விநோதப் பரதேசி வசப்படுத்திக் கொண்டிருக்கலாம். இவனைத் தூண்டி, அவனை எங்கேயாவது தனியான இடத்திற்கு அழைத்து வரச்செய்து, ஆட்களை விட்டு, அவனை அபகரித்துக் கொண்டு போயிருக்க லாம். உங்கள் பெண்ணின் அடையாளம் இந்த கோபாலசாமிக்கு ஒரு வேளை தெரிந்திருக்கலாம். அல்லது, மத்தியானமே பங்களா விற்கு வந்து பெண்ணைப் பார்த்துக் கொண்டு, கட்டிடத்தின் அமைப்பையும் தெரிந்து கொண்டிருக்கச் செய்து, இரவில் ஆட்கள் வரும்போது அவர்களுக்கு உதவியாக இருக்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கலாம். அப்படி வந்த இடத்தில், அவனுடைய துரோக புத்திக்குத் தகுந்த தண்டனையைக் கடவுள் செய்வித்தத னால், அவன் இப்போதிருக்கும் நிலைமையை அடைந்திருக்க லாம். அவனுக்குக் கலியாணம் ஆகவில்லை. அவனோடு வந்த பெண் எதிரியைச் சேர்ந்த வேறே மனுவியாகத்தான் இருக்க வேண்டும். இந்தச் சம்பவத்தைப் பற்றி நாங்கள் எல்லோரும் யோசித்து யோசித்துப் பார்த்தோம். இது தான் எங்கள் மனசுக்குப் படுகிறது. இதைத் தவிர வேறு எந்தவிதமாக அர்த்தம் செய்கிறது என்பதே தோன்றவில்லை" என்றார். பட்டாபிராம பிள்ளை, "ஆம் அண்ணா! எனக்கும் அப்படித் தான் படுகிறது. நான் இந்த கோபாலசாமியினுடைய படத்தை உங்களுக்கு அனுப்பியதும் நல்லதாகவே முடிந்திருக்கிறது. நீங்கள் சொன்னது நிரம்பவும் முக்கியமான தகவல். இதை நான் உடனே போலீசாருக்குத் தெரிவித்தால், இதை வைத்துக் கொண்டு அவர்கள் மறுபடி பிரயத்தனப்பட்டுப் பார்ப்பார்கள். சரி, நீங்கள் எல்லோரும் இப்படியே அடியேனுடைய பங்களாவிற்கே வர வேண்டும். எங்களுடைய பங்களாவில் ஒரு பெரிய பாகம் காலி செய்யப் பட்டிருக்கிறது. அது நிர்ம்பவும் செளகரியமான பாகம். அங்கே அநேக சிப்பந்திகள் இருக்கிறார்கள். போனவுடன் ஸ்நானம், அநுஷ்டானம், போஜனம் முதலியவற்றைச் செய்வதற்கும், இரவில் படுத்துக் கொள்வதற்கும் வேண்டிய சகலமான ஏற்பாடுகளும் ஆயத்தம் செய்யப்பட்டிருக்கின்றன. கோமளேசுவரன் பேட்டையில் உள்ள உங்கள் கிரகத்தில் இது வரையில் அவர் ஒருவரே இருந்தார் ஆகையால், அவ்விடத்தில்