பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 மாயா விநோதப் பரதேசி மல்ல, பதினாயிரமல்ல எனக்காகச் செலவு செய்யக்கூடிய மனிதர்கள் அங்கே இருக்கிறார்கள். எனக்கு இப்பேர்ப்பட்ட கதி நேர்ந்துவிட்டதென்ற செய்தியைக்கூட அவர்களுக்குத் தெரியப் படுத்த நான் அசக்தனாக இருந்து தவிக்கிறேன்" என்று நிரம்பவும் தாபந்திரியமாகவும் பரிதாபகரமாகவும் கூறினான். அதைக் கேட்ட சாயப்பு சிறிது நேரம் சிந்தனை செய்த பின்னர் நிரம்பவும் விசன கரமாகவும் கனிகரமாகவும் பேசத் தொடங்கி, "ஐயா! உம்முடைய வரலாற்றைக் கேட்க, நான் என்னுடைய சொந்த விசனத்தைக்கூட இப்போது அவ்வளவாக உணரவில்லை. உம்முடைய நிலைமை நிரம்பவும் பரிதாபகரமாக இருக்கிறது. உம்முடைய முகத்தின் கம்பீரத்தைப் பார்க்கும் போதே, நீர் திருட்டு முதலிய அற்ப குற்றங் களில் இறங்கக் கூறியவர் அல்ல என்பது நன்றாகத் தெரிகிறது. நீர் சொன்ன வரலாறு உண்மையானதென்றே என் மனதில் தானாகவே ஒருவித நம்பிக்கை உண்டாகிறது. இந்த வேளையில் ஆண்டவன் என்னை இங்கே கொண்டுவந்து விட்டு, உம்முடைய துக்ககரமான வரலாறு என் காதில் விழும்படி செய்தது, நான் என்னால் ஆன உதவியை உமக்குச் செய்ய வேண்டும் என்ற கருத்தோடு தான் என்று நினைக்கிறேன். நான் உம்மைப் பார்த்த தற்கு ஒரு பலனாக, உமக்கு என்னால் ஏதாவது உதவி ஆக வேண்டுமானால், நான் அதைச் செய்யத் தயாராய் இருக்கிறேன். நாளைய தினம் சாயுங்காலத்திற்குள் நான் இவ்விடத்திலிருந்து வெளியில் போய் விடுவேன். இந்த ஊர் போலிஸ் கமிஷனர், இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர் முதலியவர்கள் எனக்கு நிரம்பவும் வேண்டிய மனிதர்கள். போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் நாளைய தினம் காலையில் இங்கே வருவார். அவரிடம் உம்மைப் பற்றி நான் சிபார்சு செய்து பார்க்கிறேன். அவரால் உமக்குச் செய்யக்கூடிய உதவியை அவசியம் செய்யச் சொல்லுகிறேன். நீர் கவலைப்பட வேண்டாம்" என்றார். அதைக் கேட்ட இடும்பன் சேர்வைகாரன் அளவற்ற மகிழ்ச்சியும் பூரிப்பும் அடைந்து, தனது மனப்பூர்த்தியான நன்றியறிதலை வெளிப்படுத்தி, "சாயப்பு ஐயா! நீங்கள் சொல்வது போல, ஆண்டவன் தான் என்மேல் இரக்கங் கொண்டு உங்களை இந்தச் சமயத்தில் இங்கே அனுப்பி இருக்கிறார் என்று நினைக்கிறேன்.