இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
அடியடா முரசம் அன்னையும் வந்தனள்!
பிடியடா சங்கம் போற்றியே பாடடா!
மிடி யெலாம் துடைத்த துடிநிகர் இடையினன்
இடியெனச் சிரித்தே எழுந்தனள் ஜய ஜய!
அரக்கர்கள் மடிந்தனர் அல்லலும் தொலைந்தது
முருக்கினை ஒத்ததோர் முறுவலின் முன்னே.
அன்னை பயங்கரி அகிலாண் டேஸ்வரி
முன்னையும் பின்னையும் முடிவிலா திருப்பவள்
பசுபதி தன்னையே பாகத் திருத்துவாள்
அசுரரைச் சாடியே அகமகிழ்ந் திடுவாள்
குருதியில் தினைத்தே கொக்கரித் தாடுவாள்
கருமுகில் போன்றவள் கழலடி நினைந்தே
அடிமையாந் தளையினை அறுத்தெறிந்திட்டோம்
படர்புகழ் பாரதப் பண்பினை நாட்டினோம்;
உண்மையே மூச்சதாய் உழைப்பதே உயிரதாய்
எண்ணிலாப்பேரறம் இயற்றி நாம் வாழுவோம்.
விளைந்தபே ரிடரெலாம் விடியற் கருக்கலாம்
களைந்துநல் லின்பக் கதிரவள் வீசுவாள்;
71