இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
இரணகளந் தன்னில்
இடியெனச் சிரித்துக்
கரமலர் தாங்கிய -
கடிவா ளுடனே
அடிமலர் திங்கள்போல்
அமுதினை வழங்க
வடிஅழ குடனே
வந்தனள் அன்னை!
*
நயனம் அனல் பொங்க
நரசிர மாலை பிறங்க
அசுரர் உடல் நசுங்க
ஆடி வரு கின்றாள்
*
கொதிகடல் எழுந்த ஆம்பல்போல்
குறுதி படித்த மேனியள்
பதமலர் அன்பொடு வாழ்த்தியே
பசுபதி பரவிடும் மொய்ம்பினள்
அன்னை காளி பயங்கரி
அகில லோகமு மாக்குவாள்
கன்னி வந்தனள் போற்றுவோம்
கால காலநீ வாழ்கென்றே!
75