இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
மின்னலை வான வில்லில் இழைத்தே—சுடர்
மீன்திரள் நவமணிகள் பலநூறு கோத்து
சன்னமாய்க் கதிரவன் கம்பிகள் பின்னி—நிறை
சரத்கால வெண்ணிலாச் சரிகைகள் கட்டி
காதல்தேன் ஊறிடும் உள்ளமலர் வீசும்—மணங்
கமழவே கனவெல்லை அமுதோடம் தாண்டி
மோதுமென் உணர்வாழி கரையிடும் அன்பாம்—உயிர்
முத்தொளிர் மாலையிது மகிழ்வாக அணிவாய்.
93