இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
நாடகம்
இருளன்:-தப்பா ஒண்ணுஞ் சொல்லலியே.
வயிர:- நீ ஒண்ணுஞ் சொல்ல வேண்டாம்.சும்மா இருந்தாப் போதும்.நான் அப்புறம் வர்றேன்.(வயிரமுத்து விரைவாகப் போகிறான்.சடைச்சி வருகிறாள்.)
செல்ல:-(வியப்போடு)இவரா மின்னொளியின் கணவனாகப் போகிறார்.இவரா ? உண்மையாகவா?
இருளன்:-ஆமாங்க.தங்கச்சி மகனில்லே.கொழுத்த சம்பந்தம்.சடைச்சி.......!
சடை:-அப்பா !
இருளன்:-சோறு போடும்மா.நேரமாச்சு.
சடை:-இதோ ஆச்சுப்பா.(சடைச்சி உள்ளே போகிறாள்)
மூன்றாம் காட்சி
(பொன்னப்பர் வீடு மின்னொளி சுகாதாரப் பாட்டொன்றை முனகிக்கொண்டே குத்துவிளக்கு துடைக்கிறாள்.செல்லத்துரை வருகிறார்)
மின்னொளி:-(அன்போடு) வாருங்கள்.
செல்ல:- ஐயா இருக்கிறார்களா ?
மின்னொளி:-வெளியே போயிருக்கிறார்.வந்து விடுவார்.உட்காருங்கள்.
செல்ல:- நான் பிறகு வருகிறேன்.
மின்னொளி:-என்ன அவ்வளவு அவசரம் ? பள்ளிக்கூட நேரமில்லையே ?