பக்கம்:மில்டனின் மாமல்லன் சிம்சோன்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 மாமல்லன் சிம்சோன் பென்று சொல்ல முடியாதபடி தனி நயமுடையதாயிருப்பது காண்க: "மன்னும் எம் இறை இன் அருள் மாறின்றிப் பின்னி நின்றது பேசும் உயிர்களை; அன்ன தாகலின் அன்னவன் வான் புகழ் பன்னிப் பன்னிப் பராவுவம் வாரிரே' Let us with a gladsome mind Praise the Lord, for He is kind; For His mercies aye endure, Ever faithful, ever sure என்றவாறு காண்க. கேம்பிரிட்சு பல்கலைக் கழகத்தில் இளம் புலவர் (B.A.) பெரும்புலவர் (M.A.) என்ற பட்டங்களைப் பெற்றபின் மில்ட்டன் தம் தந்தையார் அப்போது குடிமாறிய இடமாகிய பக்கிங்ஆம்சயரிலுள்ள கார்ட்டனுக்கு வந்தார். கவிதையே தமது வாழ்க்கைப் பணி என்பதைக் கல்லூரி யிலேயே இவர் உறுதிப்படுத்தியிருக்க வேண்டும். கிறித்து பிறந்த நாள் காலைக் கொண்டாட்டம் (Ode on the morning of Christ's Nativity) என்னும் நடனப்பாட்டு அல்லது கும்மி அங்கே அவர் எழுதியது ஆகும். உமது வாழ்க்கையில் நீர் செய்யப்போவது யாது?’ என உசாவிய நண்பர் ஒருவர்க்கு எழுதிய கடிதத்தில், என் நினைப்பா! அஃது இறவாப் புகழுடைய ஈசனைப்பற்றியது! இதை உன் காதில் மட்டுமே இப்போது கூறுகிறேன். இப் பெரும்பணிக்கென இப் பொழுதே என் இறகுகளை யான் கோதிக் கத்தரித்துக்கொள் கிறேன்" என்று அவர் கூறுகிரு.ர். 1. கவிதையின் செவ்வி இக் காலத்தில் இவர் நாட்டுப்புறத்தில் வாழ்ந்தது இவரது கவிதையின் செவ்விக்கு ஒத்ததாகவே இருந்தது. அதற்கேற்ப அவரும் தமது உறைவிடத்தை அழகுபட அமைத்துக் கொண்டனர். இனிய காட்சிகளும் இன்னெலி