இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சடையப்பர் தன் முடிவை மாற்றிக் கொண்டார்.
"ராதா!"
"இந்த உண்மையைச் சொல்லிவிட நான் எவ்வளவோ முயன்றேன். ஆனால் நீங்கள், எல்லாம் எனக்குத் தெரியும் என்று என் வாயை அடைத்து விட்டீர்கள்.”
"பரவாயில்லை!” என்றுகூறி கீதா கல்லறைக்குள் போகுமுன்னரே, ராதாவை ஆனந்திடம் ஒப்படைத்தார் சடையப்பர்.
"மாப்பிள்ளே, ராதாவுக்கு இப்ப எதுவும் குஷ்டம் இல்லை!" என்று குத்தலாகவும் சொல்லிக்காட்ட அவர் தவறவில்லை.
★