பக்கம்:முக அழகைக் காப்பது எப்படி.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


இந்தக் காற்றுகள் செய்யும். காரியங்களைப் பாருங்கள்.

1. பிராணன் என்கிற காற்று, இதய ஓட்டத்தையும், சுவாசத்தையும் கட்டுப்படுத்துகிறது. இதை உயிர்க் காற்று என்பார்கள்.

2. அபானன்: சிறு நீர், மலம் மற்றும் உடலில் உண்டாகும் கழிவுப் பொருட்களை வெளியேற்ற வைக்கிறது. இதை மலக்காற்று என்பார்கள்.

3. சமானன்: உண்ணும் உணவை நன்கு ஜீரணம் செய்ய உற்சாகப்படுத்தி உதவுகிறது. இதை நிரவுக் காற்று என்பார்கள்.

4. உதானன்: உள்ளே காற்றைச் சுவாசிக்கும் போதும், உணவை உண்ணுகிறபோதும், ஒன்றுக் கொன்று தடுமாறி விடாமல், ஒழுங்குபடுத்தி உள்ளே அனுப்பும் பணியைச் செய்கிறது. இதை ஒலிக்காற்று என்பார்கள்.

5. வியானன்: சுவாசித்த காற்றையும் சாப்பிட்ட உணவின் சக்தியையும் சகல உறுப்புகளுக்கும் கொண்டு செல்ல உதவுகிறது. இதை தொழிற் காற்று என்பார்கள்.

6. நாகன்: இதை ஏப்பக் காற்று என்பர்.

7. கூர்மன்: இமைகளை இயக்கி, விழிகளைக் காப்பாற்றும் கடமை கொண்டது. இதை விழிக் காற்று என்பர்.

8. கிரிகரன்: சுவாசப் பகுதியில் நுழைந்த நுண் பொருட்களை வெளியேற்ற உதவுகிற தும்மற் காற்று.