பக்கம்:முக அழகைக் காப்பது எப்படி.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முக அழகைக் காப்பது எப்படி?

53


இப்படி தீமை பயக்கும் கழுவுத் திரவத்தையும். பாலேடு மருந்தையும் பயன்படுத்துகிறபோது. முகத்தின் அடியில் முன்னரே அதிக அளவில் ஊறத் தொடங்கிய கொழுப்புச் சுரப்பு. மேலும் அதிகமாக சுரந்து. கட்டிகளைப் பெரிதாக பிறப்பித்து விடும் கொடுமை நேர்ந்து விடும்.

ஆகவே, நல்ல மருத்துவரை அணுகி, அவரது ஆலோசனையின் படி உங்கள் முக சருமத்திற்கு எது பொருந்தும் என்பதை அறிந்து கொண்டு வாங்கிப் பயன்படுத்தவும்.

2. தோல்படைகள்: (black Heads)

முகத்தின் தோல் பகுதியில் இரண்டு விதமான தோல் படைகள் இருப்பது உண்டு. ஒன்று கரும்படை (Black heads) மற்றொன்று வெண்படை(White heads)

தோலுக்கு அடியிலே 'சீபம்’ என்கிற கொழுப்புத் தன்மை கொண்ட ஒருவித திரவம் உண்டு. அது அளவுக்கு அதிகமாக உற்பத்தியாகி தோலின் மேல் பகுதிக்கு வந்து தோலிலுள்ள நுண்ணிய துவாரங்களை விட்டு அதன் வெளிப்புறத்திற்கு வந்து அந்தத் தோல் பகுதியில் சிறிது கட்டியானத் தன்மையுடன் பரவி விடுவதால் அதிலும் அது கருப்பாக, தோற்றம் கொண்டிருப்பதால் அதைக் கரும் படை என்று கூறுகிறார்கள்.

பொதுவாக அது தோலுக்கு அடியிலுள்ள எண்ணெய் சுரப்பிகளினாலேயே ஏற்படுகிறது. அது ஏன் கருமையாகத் தோற்றமளிக்கிறது என்றால் இப்படி