பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

3



ஆய்ந்தெடுத்த இசைவல்லார் செய்த வீணை
ஆர்த்தெழுப்பும் இன்னெலியும், கானில் நன்கு
காய்ந்திருக்கும் வேய்ங்குழலில் தோன்றும் பண்ணும்,
கடும்பாம்பும் மெய்ம்மறந்து நிற்க இன்பம்
தோய்ந்திருக்கும் படியூதும் குழலும், இன்னும்
துன்பமெலாம் துடைக்குமிசைக் கருவி யாவும்
பாய்ந்தளிக்கும் இன்பமெலாம் என் றன் பிள்ளை
பரிந்துளரும் மழலைதரும் இன்பம் ஆமோ?

4


"அப்படித்தான் சொல்லிடுவீர்! மாடி மீதில்
அன்றொருகாள்குறுந்தொகைப்பாட்டொன்றுசொல்லி
ஒப்புண்டோ இதற்கென்றீர்! அதனே டென்னே
உவமித்துக் கேலிசெய்தீர்! உண்ண வாரும்
எப்பொழுதும் இதுதான? என்ருல் நூலில்
எழும்சுவையால் சுவையுணவை மறந்தேன் என்பீர் !
எப்பொழுதே னும்விளக்கை அணைக்க வந்தால்
இருஇருநூல் இன்பம்உயர் வென்பீர் அத்தான்!”

5


"நானுாற்றுப் புறப்பாடல் சொல்லு கின்ற
நம்முன்னேர் செய்தபெரும் வீரப்போரும்
தேனுாற்றோ எனக்கருதும் அகநா
செய்யகுறுங் தொகை கூறும் காதல் வாழ்வும்
கால்நுாற்ருே டைந்தாண்டின் அகவை யில்நான்
கண்டசில காவியமும் தந்த இன்பம்
மானேட்டும் விழியுடைய கண்ணே! என்றன்
மகவுதரும் இன்பத்திற் கீட தாமோ?”

89