பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



4

 பணிவறியேன் அடக்கமிலேன் சான்றேர் என்பாற்
பகருமொழி மதித்தறியேன் வலிய னேனும்
பணிகின்றேன் உன்முன்பு நின்மொ ழிக்குப்
படிகின்றேன் என்மதலாய்! தோற்று விட்டேன்

5


உன்தாயின் விழிக்கடைக்கோ‌ர் ஒப்பே யில்லை
உலகிலென நினைந்திருந்தேன் களிப்புங்கொண்டேன்
என்வாயை அடைத்துவிட்டாய் கவலை தோயா
எழில்மலருன் கருவிழியால் தோற்று விட்டேன்

6


இலக்கணநூல் இலக்கியநூல் நிகண்டு யாவும்
எளிதாகக் கற்றுணர்ந்தேன் பெருமை கொண்டேன்
சொலக்கருதி நாஉந்த இதழின் ஓரம்
சுழல்மழலைப் பொருள்தேறேன் தோற்றுவிட்டேன்

7


எழுதரிய ஓவியமே! என்றன் நெஞ்சில்
எழுந்துவநடம் செயுந்தேவே! எங்கள் காதற்
பழந்தந்த சுவையே! எப் படியோ என்னைப்
பணிவித்து நல்லாட்சி செலுத்து கின்றாய்!
-3