பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எம்மவர் தந்தார் நிலைமண்டில ஆசிரியப்பா 10ரிலைப் பொழுதில் மங்கிய ஒளியில் డివడి) முடித்து விரிகதிர்ச் செல்வன் மறைந்தனன்; என்னை மணந்தவர் வந்தார் கரைந்திடு புள்ளினம் கண்ணயர்க் திருந்தன; மேலுயர் மாடம் மீதினில் ஓரறை: 5 பாலொளி சிந்தப் பார்த்தது நிலவு: பஞ்சணை அமர்ந்தேன் பக்கத் தமர்ந்தார் அஞ்சன விழியை அவர்பாற் செலுத்தினென்; பசியோ டிருந்தவர் பாய்ந்து வந்தெனை அசைய விடாமல் அள்ளி விழுங்கினர்; 10 இன்பக் கடலுள் இருமீன் ஆயினம்! அன்பில் திளைக்கும் அங்கல் வேளை மின்விடு விளக்கொளி மெல்லென அசையச் சன்னல் வழியே சார்ந்தனை தென்ருல்! உள்ளமும் உடலும் சிலிர்த்தன; காதற் 15 கள்ளுண் டின்பக் கற்பனை உலகில் இருந்திடும் எம்மை மறந்திடச் செய்தனே! பறந்தனம் விண்ணிற் பறவைக ளாகி; |93