பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொண்டவன் ஒர்நாள் அண்டையில் வந்து விளையாட் டுணர்வால் விடுதலை தந்தான்; தலைகாட் டாமல் தப்பி ஓடிட முனைந்தேன் சிறகோ முறிந்தது கண்டேன். கினைந்தேன் நடந்தே நெடுங்கான் ஏக; பிதுங்கும் பெருவிழி அச்சங் காட்டப் பதுங்கி வந்தது பாழும் பூனே ஒதுங்கி நடப்பினும் உயிர்பெறல் அரிதென மீண்டும் சென்று கூண்டுள் நுழைந்தேன் மீளா அடிமை நேர்ந்தது மேலும்; என்னிலை தானே இக்காட் டவர்க்கும்! கன்னிலை தந்தான் நலமுயர் காந்தி விடுதலை என்றே வெளியில் வந்தனர்; கெடுதலே உள்ளம் கிடைத்ததைச் சுருட்டும் சுரண்டல் பூனே துரத்தல் காணிர்! இருண்ட வாழ்வு ஏகுவ தென்ருே? பூனைகள் தொலையும் பொழுதுதான் என்ருே? கொடுமை கொடுமை என்று f == கூவிச் சலித்தது கூண்டுக் கிளியே!

  • 106

2O 25 30 Յ5