பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 'இரண்டுநாள் உண்டே னில்லே, இருமலால் துடித்தாள் பெண்டு; சுருண்டன பிள்ளை எல்லாம் | சோற்றுர்ே இன்மை யாலே, இரங்துயிர் வாழ்வ தற்கும் என்மனம் இடந்த ராமல் விரைந்துநான் விறகு வெட்ட வெளிப்புறக் காட்டில் சென்றேன் 4 காய்ந்த ஒர் மரத்தில் ஏறிக் கடிதினில் வெட்டும் போழ்து தேய்ந்தஎன் உள்ளம் கோவத் திட்டினர்; இறங்கி வந்தேன்: ஒய்ந்தஎன் உடலில் குச்சி ஒடிந்திட அடித்தார். கீழே சாய்ந்தபின் நடந்த தேதும் சற்றுமே அறியேன்” என்ருன் 5 மற்றவர் காட்டிற் சென்று மரத்தினை வெட்டி னேனென் றுற்றதை உரைத்தாய்! சிறையில் ஒன்றரை மாதம் தங்கு! - மற்றது மறுத்தா யாகில் மரத்தினில் விறகு வெட்டி விற்றதில் ஐந்து ரூபாய் வைத்திடு வெளியில் செல்வாய்! . 108