இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
குதிரை நினைத்தால்...?
எண்சீர் விருத்தம்
1
கத்திரியால் அழகுசெய்த பிடர்நி மிர்த்துக்
- கடிவாளம் கவ்விச்செல் புரவி மீது
மெத்தையமைத் தோரிளைஞன் அமர்ந்தி ருந்தான்
- மெதுவாகச் செல்லமனம் ஒருப்ப டாமல்
வித்தைபயில் குதிரையென விரைய வேண்டி
- விரித்துவிட்டான் கைச்சவுக்கை; அடியும் பட்டுப்
பத்துமடங் கதிகமாக வேகங் கொண்டு
- பறந்ததுவே அப்புரவி , செல்லுங் காலே
2
" தூக்குவது போதாதோ ? இவனை நீண்ட
- தொலைவுள்ள ஊருக்குச் சுமந்து வந்தேன்
தாக்குகிருன் கைச்சவுக்கால் கெடுவான் என்னை ,
- தருகின்ற உணவுக்கா இந்தத் தொல்லை ?
போக்கற்ற உலகத்தில் குனிந்து தந்தால்
- பொல்லாத மனிதரவர் எல்லாம் செய்வர்
காக்கின்ற உழைப்பாளி ஒட ஒடக்
- கனவான்கள் விரட்டுகிறர் என்ற எண்ணம்
110