பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 உள்ளத்தை உறுத்தியதால் வேகங் குன்றி ஊர்ந்துசெல மேலமர்ந்த காளை கன்ருய்ப் பள்ளத்தை உண்டாக்கும் வண்ணம் காலைப் பதித்துள்ள செருப்பாணி தாக்கச் செங்ர்ே வெள்ளத்தைப் பாய்ச்சியது புரவி மேனி : விளையாட்டாய் அவனெண்ணி விட்டான் ; மேலும் மெள்ளத்தான் செல்கிறதென் றெண்ணிச் சாட்டை மேன்மேலும் சுழற்றிவிட்டான் விரைந்து செல்ல 4. வில்விட்ட அம்பெனவே விரைந்த தாங்கே வெலவெலத்துப் போன்ைஅப் ւյvaն மேலோன் ; பல்விட்ட கடிவாளம் இறுகப் பற்றிப் படுத்துக்கொண் டகம்கடுங்கி அவனி ருந்த வெல்வெட்டு மெத்தையுடன் உருண்டு ருண்டு வீழ்ந்திடவே உதறிற்று நெறிக்கி டந்த கல்பட்டுச் சிதறுண்ட மண்டை செங்ர்ே கசிந்திடவே உலகிருந்து நீங்கி விட்டான் 5 பாட்டாளிக் கூட்டத்தைக் குதிரை யாக்கும் பணக்காரர் வாழ்வுமிந்த கிலேயே தானே? மாட்டோடு மனிதரையும் மதிக்கின் ருர்கள் மனம்கொந்து பொறுத்திருப்பர் அளவு மீறின் காட்டாரோ தம்வலிமை ? இங்கு வாழக் கருதாரோ தொழிலாளர் உரிமை கேட்க மாட்டாரோ? அவரெல்லாம் உருத்தெ ழுந்தால் மனம்புரவிச் செயல்தன்னைக் காட்டி டாதோ ! 111