பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துன்பமடா துன்பம் ! துன்பமடா துன்பம்-வறுமைத் துன்பமடா துன்பம் பசித்துயரால் சிறுமகவு பால்சுவைக்கப் பாலின்றிப் பரிந்தன்னை முகம்நோக்கப் பாவையவள் நீர்ததும்ப நசித்துருகும் மனத்தோடு நயனத்தால் பேசுகின்ருள் நானென்ன சொல்லிடுவேன்? மரமுண்டு கயிறுண்டு (துன்) எத்தனைகாள் பட்டினியால் இன்னலுற்று வாழ்ந்திடுவோம் இன்னல்தரும் நோய்வங்தே இருவரையும் பற்றியது பித்தனைப்போல் மருத்துவன்பால் சென்றுகிலே கூறியதும் பணமிருந்தால் பேசென்ருன் என்செய்வேன் பேருலகில் (துன்) மாள்வதற்கு விட்டாரா? மாட்டிவிட்டார் கைவிலங்கு மனிதனுயிர் காப்பதற்கோர் வகையுண்டா? நலிவுதுடைத்(து) ஆள்வதற்கும் கற்ரு ரா? அதுவுமில்லை ! இங்கிலேயில் அறமெங்கே ? வாழ்வெங்கே அன்பூறும் வழியெங்கே (துன்) 113